செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பூவாணியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் பூவாணியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கூட்டுறவு மில் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சென்று விட்டது. இந்த விபத்தில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த ஆனந்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனந்த் மீது மோதி விட்டு சென்ற வாகனம் எது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பூவாணியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் பூவாணியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கூட்டுறவு மில் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சென்று விட்டது. இந்த விபத்தில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த ஆனந்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனந்த் மீது மோதி விட்டு சென்ற வாகனம் எது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.