செய்திகள்
தனியார் பஸ் மோதி பலியான ராஜ்குமார்.

திருப்பூரில் தனியார் பஸ் மோதி வாலிபர் தலை நசுங்கி மரணம்

Published On 2021-10-20 10:49 GMT   |   Update On 2021-10-20 10:49 GMT
அவிநாசியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த தனியார் பஸ் ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் மோதியது.
திருப்பூர்:

திருப்பூர் ஆத்துப்பாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் சஞ்சீவி இவரது மகன் ராஜ்குமார் (வயசு 27). இவர் இன்று காலை வேலை தொடர்பாக திருப்பூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 

அப்போது தண்ணீர் பந்தல் அருகே வரும்போது அவிநாசியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த தனியார் பஸ் ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் மோதியது. நிலை தடுமாறிய ராஜ்குமார் பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்கினார். 

இதில் அவரது தலை மீது பஸ் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த விபத்து குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News