செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்பு படம்.)

கேரளாவில் இன்று 1,239 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-03-22 14:11 GMT   |   Update On 2021-03-22 14:11 GMT
கேரளாவில் இன்று புதிதாக 1,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 11,05,468 ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, மாநிலத்தில் இன்று புதிதாக 1,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 11,05,468 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 4,507 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,766 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 10,76,571ஆக உள்ளது. தற்போது 24,081 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பைக் கண்டறிய இன்று 34 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Tags:    

Similar News