உள்ளூர் செய்திகள்
காற்றாலை, சூரிய ஒளி மின்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
காற்றாலை, சூரிய ஒளி மின்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மின்துறை அமைச்சகத்தை இரண்டாக பிரித்து நீர் மின்னுற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய ஒளி மின்னுற்பத்தி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்காக புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தை புதிதாக அமைக்க வேண்டும்.
மத்திய அரசும், பல மாநிலங்களும் இத்தகைய அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழக அரசும் இத்தகைய அமைச்சகத்தை ஏற்படுத்தி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தியில் பிடித்துள்ள முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
புதுப்பிக்கவல்ல எரிசக்தி குறித்த பாடப்பிரிவுகளும், ஆராய்ச்சித் திட்டங்களும் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, முழுவீச்சில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மின்துறை அமைச்சகத்தை இரண்டாக பிரித்து நீர் மின்னுற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய ஒளி மின்னுற்பத்தி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்காக புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தை புதிதாக அமைக்க வேண்டும்.
மத்திய அரசும், பல மாநிலங்களும் இத்தகைய அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழக அரசும் இத்தகைய அமைச்சகத்தை ஏற்படுத்தி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தியில் பிடித்துள்ள முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
புதுப்பிக்கவல்ல எரிசக்தி குறித்த பாடப்பிரிவுகளும், ஆராய்ச்சித் திட்டங்களும் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, முழுவீச்சில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.