ஆன்மிகம்
வரதராஜ பெருமாள்

இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை

Published On 2020-11-12 06:44 GMT   |   Update On 2020-11-12 06:44 GMT
பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்மர், பெருந்தேவி தாயார், ராமர், லட்சுமணர், சீதாதேவி, சக்கரத்தாழ்வார், ஆண்டாள் நாச்சியார் ஆகிய மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து பசுக்களை கொண்டு வந்து, பக்தர்கள் குங்குமம், மஞ்சள், பொட்டு வைத்தனர். பின்னர் மாலை அணிவித்து, பட்டுப்புடவைகள் போர்த்தி கோவில் பட்டாச்சாரியார் பாலாஜி கற்பூர ஆராதனை காண்பித்தார். இதில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News