செய்திகள்
ஜிகே வாசன்

தேர்தலுக்கு பிறகும் திமுக எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும்- ஜிகே வாசன்

Published On 2021-03-22 04:39 GMT   |   Update On 2021-03-22 04:39 GMT
அதிமுக தொடர்ந்து நல்லதே செய்து கொண்டு இருக்கிறது. எனவே மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி.
ஈரோடு:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார். அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யுவராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்குகளை சேகரித்தார்.

முன்னதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், சலுகைகளும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து உள்ளது. இதனால் மக்களுக்கு தமிழக அரசின் மீது நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையால் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பிரகாசமாகி உள்ளது. ஏப்ரல் மாதம் 1-ந் தேதி மீண்டும் ஈரோட்டுக்கு வந்து, மேற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.

பெரும்பாலான நேரங்களில் கருத்து கணிப்புகள் முழுமையான முறையில் கொடுப்பதில்லை. மக்கள் கணிப்புதான் நல்லது. நல்லது செய்தவர்களுக்கு மக்கள் மனம் திறந்து வாக்களிப்பார்கள். அ.தி.மு.க. தொடர்ந்து நல்லதே செய்து கொண்டு இருக்கிறது. எனவே மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி.

தமிழகத்தில் தேர்தலுக்கு பின் முதல் அணியாக வெற்றி அணியாக அ.தி.மு.க. நீடிக்கும். 2-வது அணியாக எதிர்கட்சியாக தான் தி.மு.க. விளங்கும். பிற கட்சிகள் அதே நிலையிலேயே நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News