செய்திகள்
பர்கூர் அருகே விவசாயி மீது தாக்குதல்- 4 பேர் மீது வழக்கு
பர்கூர் அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூர் அருகே உள்ள நக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). விவசாயி. சம்பவத்தன்று இவரை, அதே ஊரை சேர்ந்த ராஜப்பன் (50), அவரது மனைவி காவேரியம்மாள் (45), மகன்கள் ராமகிருஷ்ணன் (25), சிவக்குமார் (22) ஆகியோர் முன்விரோதம் காரணமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீசார், ராஜப்பன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.