ஆன்மிகம்
மீனாட்சிபேட்டை முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மீனாட்சிபேட்டை முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-09-17 05:09 GMT   |   Update On 2021-09-17 05:09 GMT
மீனாட்சிபேட்டை முத்து மாரியம்மன் கோவில் விமான கலசம், ராஜ கோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
புதுவை உழவர்கரை நகராட்சி மீனாட்சிபேட்டை ரமணபுரத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேக விழா கடந்த 12-ந் தேதி மகா கணபதி பூஜையுடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் யாகசாலை பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு மகா பூர்ணாகுதி, 9.30 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு முத்து மாரியம்மன் கோவில் விமான கலசம், ராஜ கோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News