செய்திகள்
கோப்புபடம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

Published On 2020-11-01 09:03 GMT   |   Update On 2020-11-01 09:03 GMT
குத்தாலம் அருகே கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
குத்தாலம்:

குத்தாலம் பேரூராட்சியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகமாக உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் குத்தாலம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், மளிகைக் கடைகள், ஓட்டல்களில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பல கடைகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் மக்கள் சற்று மனம் மாறி கடைகளுக்கு பைகளை கொண்டு செல்லக்கூடிய நிலையில் குத்தாலத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதால் மீண்டும் மக்கள் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.

எனவே பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News