செய்திகள்
பெருந்துறையில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி
பெருந்துறையில் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வடமாநில வாலிபரை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:
பீகார் மாநிலம் பாட்னா அடுத்த மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் சலீம் (வயது 27). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று சலீம் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சலீம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சலீம் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.