ஆன்மிகம்
சதுரகிரி

சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு தடை

Published On 2021-08-20 07:39 GMT   |   Update On 2021-08-20 09:12 GMT
ஆவணி மாத பவுர்ணமியையொட்டி அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பிரதோசம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்று (20-ந் தேதி) பிரதோ‌ஷமும், 22-ந் தேதி பவுர்ணமியும் ஆகும். ஏற்கனவே ஆடி அமாவாசைக்கு கொரோனா தொற்று காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் ஆவணி பிரதோசத்துக்கு சதுரகிரிக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (20-ந் தேதி) முதல் 23-ந் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மலையடி வாரப்பகுதி களில் உள்ள தோட்டங்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் தாணிப்பாறை விலக்கு, மகாராஜபுரம் விலக்கு உள்ளிட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு வழக்கம் போல் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News