செய்திகள்
விராட் கோலி பாபர் அசாம்

விராட் கோலி, பாபர் அசாம் இருவரிடம் ஒற்றுமையை பார்க்கிறேன்: டு பிளிஸ்சிஸ்

Published On 2020-11-15 17:58 GMT   |   Update On 2020-11-15 17:58 GMT
இந்திய அணியின் விராட் கோலி, பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆகியோரிடம் ஒற்றுமையை பார்க்கிறேன் என டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தலைசிறந்த வீரராக உள்ளார். இந்த காலக்கட்டத்தின் சிறந்த வீரர்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் திகழ்கிறார்கள். தற்போது பாகிஸ்தானின் பாபர் அசாம் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

விராட் கோலியுடன் இணைத்து பேசப்படுகிறார். விராட் கோலி அளவிற்கு சாதனைகள் படைப்பார் என்று கருதப்படுகிறதுது.

தென்ஆப்பிரிக்காவின் முன்னணி பேட்ஸ்மேனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுபவருமான டு பிளிஸ்சிஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகிறார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் சூப்பர் ஸ்டார் பாபர் அசாம், விராட் கோலி ஆகியோரிடம் ஒற்றுமையை பார்க்கிறேன் என டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.



மேலும் விராட் கோலி, பாபர் அசாம் குறித்து டு பிளிஸ்சிஸ் கூறுகையில் ‘‘பாபர் அசாம் - விராட் கோலி இடையே ஒற்றுமையை பார்க்கிறேன். அவர்கள் மிகவும் உயர்ந்து தர வீரர்கள். பாபர் அசாம் கடந்த ஒரு வருடமாக அடுத்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். ஆகவே, அவர் சிறப்பாக எதிர்காலத்தை பெற்றுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் ஏராளமானவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஏற்றபடி உடல் வலிமையை பெற்றிருக்கவில்லை என்று நினைத்திருப்பார்கள். அதன்பின் டி20-யில் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடுகிறார்’’ என்றார்.
Tags:    

Similar News