செய்திகள்
சிப்காட்டில் விதி முறைகளை மீறி சுற்றிய 10 பேரின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
சிப்காட்டில் முக கவசம் அணியாத 19 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
சிப்காட் (ராணிப்பேட்டை):
சிப்காட் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 10 பேரின் மோட்டார் சைக்கிள்களை, நேற்று சிப்காட் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் முக கவசம் அணியாத 19 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.