ஆன்மிகம்
சீனிவாச பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி விழா

சீனிவாச பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி விழா

Published On 2021-08-16 03:01 GMT   |   Update On 2021-08-16 03:01 GMT
மதுரை ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் சீனிவாச பெருமாளுக்கு சகல பூஜையும், வண்ண வளையல்களால் மாலை அலங்காரமும் செய்யப்பட்டது.
மதுரை திருநகர் மகாலட்சுமி காலனி அருகே உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் சுவாதி கருட பஞ்சமி விழா நடைபெற்றது.

விழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாளுக்கு சகல பூஜையும், வண்ண வளையல்களால் மாலை அலங்காரமும் செய்யப்பட்டது. இதனையடுத்து பெருமாளுக்கு மகா தீபாராதனை நடந்தது.

மேலும் பல்லக்கில் புறப்பாடு நடந்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
Tags:    

Similar News