செய்திகள்
பெண் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

Published On 2020-01-09 14:59 GMT   |   Update On 2020-01-09 14:59 GMT
கிருஷ்ணகிரி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 5 மாத கர்ப்பிணி பெண் விஷம் குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.
தருமபுரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் போலீஸ் குடியிருப்பு பகுதி அருகே வசித்து வருபவர் ராஜேஷ். இவரது மனைவி துளசி (வயது18). இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். 

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட துளசி கோபித்து கொண்டு தனது தாய் வீடான கர்நாடக மாநிலம் பெங்களூரு அனுகரபள்ளி என்ற கிராமத்திற்கு சென்று விட்டார். அங்கு கடந்த 5-ந்தேதி அன்று வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த தாய் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு 7-ந் தேதி அன்று 5 மாத கர்ப்பிணியான துளசிக்கு பிரசவத்தின் போது ஆண் குழந்தை பிறந்து இறந்துள்ளது. இதையடுத்து இன்று காலை சிகிச்சை பலனின்றி துளசியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்த அவரது உறவினர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் அங்கிருந்தவர்கள் பார்ப்போரை கண்கலங்க வைத்தது. இது குறித்து பெங்களூரு மாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News