ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா 5-ம் நாளில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா

அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா: 5-ம் நாளில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா

Published On 2020-11-25 06:35 GMT   |   Update On 2020-11-25 06:35 GMT
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று 5-ம் நாள் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று 5-ம் நாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் அம்பாளுடன் கூடிய சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர். பின்னர் அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் இருந்த வாகனங்களில் விநாயகரும், சந்திருசேகரரும் எழுந்தருளினர். அப்போது சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கோவில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் உற்சவ உலா நடைபெற்றது.

பின்னர் இரவு சுமார் 9 மணியளவில் கோவிலில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்றது. அப்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News