செய்திகள்
கருப்பு பூஞ்சை

பண்ருட்டியை சேர்ந்த தெருக்கூத்து கலைஞருக்கு கருப்பு பூஞ்சை நோய்தொற்று

Published On 2021-06-18 08:49 GMT   |   Update On 2021-06-18 08:49 GMT
கருப்பு பூஞ்சை நோய்தொற்று காரணமாக பண்ருட்டியை சேர்ந்த தெருக்கூத்து கலைஞர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சிறுவத்தூர் கிராமம் 4-வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. தெருக்கூத்து மேடை நாடக மிருதங்க கலைஞர். இவர் கொரோனா நோய் தொற்று காரணமாக சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் தற்போது கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனை தொடந்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

பண்ருட்டியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News