செய்திகள்
மாநில கூட்டுறவு பயிற்சி நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சித்தால் போராட்டம் நடத்தப்படும்: எடப்பாடி
மாநில கூட்டுறவு பயிற்சி நிலையத்தை தொடர்ந்து ஏற்காட்டிலேயே நடத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘‘மாநில கூட்டுறவு பயிற்சி நிலையத்தை தொடர்ந்து ஏற்காட்டிலேயே நடத்த வேண்டும். பயிற்சி நிலையத்தை ஏற்காட்டில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற முயற்சித்தால் போராட்டம் நடத்தப்படும்’’ என மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.