செய்திகள்
கைது

பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் கைது

Published On 2021-10-22 09:49 GMT   |   Update On 2021-10-22 09:49 GMT
குளச்சல் அருகே பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கேபிள் டி.வி. ஆபரேட்டரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
குளச்சல்:

குளச்சல் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமானர். அவரை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து சிறுமியின் தாயார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் குளச்சல் துறைமுகம் பகுதியில் இருந்து சிறுமியை போலீசார் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் ஆன்டனி என்பவர் மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு குளச்சல் மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஆன்டனியை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பதுங்கி இருந்த அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி இரணியல் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News