செய்திகள்
போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

காற்றாடி மாஞ்சா நூலுக்கு தடை நீடிப்பு- போலீஸ் கமிஷனர் உத்தரவு

Published On 2020-11-16 02:28 GMT   |   Update On 2020-11-16 02:34 GMT
மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட ஏற்கனவே தடை அமலில் உள்ளது. அந்த தடையை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை:

சென்னையில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட ஏற்கனவே தடை அமலில் உள்ளது. அந்த தடையை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவுப்படி மாஞ்சா நூலை பயன்படுத்துவது, விற்பது, தயாரிப்பது, சேமித்து வைப்பது, இறக்குமதி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கமிஷனர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News