செய்திகள்
தற்கொலை

ராஜாக்கமங்கலத்தில் தொழிலாளி தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2021-09-16 10:17 GMT   |   Update On 2021-09-16 10:17 GMT
ராஜாக்கமங்கலத்தில் கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்:

வில்லுக்குறி திருவிடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபகுமார் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் தனது நண்பர் ஜனார்த்தனன் பிள்ளை என்பவருடைய பாம்பன்விளையில் உள்ள தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். தினசரி பாம்பன்விளை வந்து வேலை செய்து விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்றும் வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றார்.

பின்னர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டிலிருந்து மீண்டும் பாம்பன் விளை தோட்டத்திற்கு சென்றார். அங்கு வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். கோபகுமார் வீட்டிற்கு வராததால் அவரது மகன் அவரை தேடி சென்றபோது அவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபகுமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


Tags:    

Similar News