செய்திகள்
அமராவதி அணை

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2021-06-17 08:44 GMT   |   Update On 2021-06-17 08:44 GMT
அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 268 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக தென்மேற்கு பருவமழை சாரலாக பெய்து வருகிறது. அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 974 கன அடி நீர்வரத்து உள்ளது.

அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு 74.51 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 268 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் அமைந்துள்ள வால்பாறையில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த மழையால் பி.ஏ.பி., பாசன திட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
Tags:    

Similar News