செய்திகள்
கோப்புபடம்

மனைவியுடன் தகராறில் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

Published On 2021-04-08 12:24 GMT   |   Update On 2021-04-08 12:24 GMT
நெல்லை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது45). இவர் வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு ராமலெட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை ராமமூர்த்தி வீட்டில் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராமமூர்த்தி 1995-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளாக அவர் வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

Tags:    

Similar News