செய்திகள்
கைது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேர் கைதாக வாய்ப்பு

Published On 2021-01-07 02:16 GMT   |   Update On 2021-01-07 02:16 GMT
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் கைதாக வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில் யார்? யார்? சம்பந்தப்பட்டு உள்ளனர் என்பது குறித்து பெயர் விவரங்களுடன் குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது. அதன் பேரில் விசாரணை நடத்தியதில் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதில் அ.தி.மு.க. பிரமுகர் அருளானந்தம் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் 3 பேர் கைதாக வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த விவகாரம் முக்கிய பிரமுகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News