செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் திமுக பிரமுகர் தொழில் போட்டியில் கொலையா?

Published On 2019-02-12 07:01 GMT   |   Update On 2019-02-12 07:01 GMT
ஸ்ரீபெரும்புதூரில் திமுக பிரமுகர் தொழில் போட்டியில் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது45). இவர் பழைய கார் வாங்கி விற்பது, கம்பெனி, தொழிற்சாலைகளில் கழிவுகளை வாங்கி விற்பது மற்றும் கட்டுமான தொழில் செய்து வந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு சங்க இயக்குனராக பதவி வகித்து வந்தார். மேலும் தி.மு.க.வில் பிள்ளைப்பாக்கம் ஊராட்சி செயலாளராகவும் இருந்தார்.

இவரது அலுவலகம் அதே பகுதி ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் உள்ளது.

நேற்று மதியம் ரமேஷ் அலுவலகத்தில் இருந்தார். அப்போது 3 ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் அலுவலகத்துக்குள் புகுந்து ரமேசை வெட்டிக் கொலை செய்து தப்பி சென்று விட்டது. இந்த தாக்குதலில் அலுவலக ஊழியர் பார்த்திபனுக்கும் கையில் வெட்டு விழுந்தது.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தொழில் போட்டி காரணமாக ரமேஷ் தீர்த்து கட்டப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். தொழிற்சாலையில் பழைய பொருட்களை எடுப்பது தொடர்பாக ரமேசுக்கும், சிலருக்கும் இடையே ஏற்கனவே தகராறு உள்ளது.

எனவே இதில் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் கூலிப்படையை ஏவி ரமேசை கொன்று இருக்கலாம் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக கிளாப் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News