செய்திகள்
அம்மா மினி கிளினிக்

அம்மா மினி கிளினிக்குகளுக்கு ரூ.144 கோடி ஒதுக்கீடு

Published On 2021-02-23 08:06 GMT   |   Update On 2021-02-23 08:06 GMT
இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அம்மா மினி கிளினிக்குகளுக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை  தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் அத்தியாவசிய ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, படிப்படியாகத் தொடங்கப்படும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் சுகாதார வசதிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக அமையும். இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அம்மா மினி கிளினிக்குகளுக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3,995 கோடி ரூபாய் மதிப்பில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுவதன் மூலம், 2021-22-ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,650 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்காக 2,470.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன், மொத்தம் 1,634 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-22-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்காக 815.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கான ஒதுக்கீடு, 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், 15,863.37 கோடி ரூபாயிலிருந்து 2020-21 திருத்த மதிப்பீடுகளில் 18,458.27 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒதுக்கீட்டை உயர்த்தி, 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 19,420.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வாரியங்களில் 26,67,355 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, 2011-ம் ஆண்டு முதல் இன்றைய நாள் வரையில், புலம் பெயர் தொழிலாளர்கள் உட்பட 84,32,473 பயனாளிகளுக்கு, நல நிதி உதவியாக 2,219.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News