செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது - கோவையில் 6 பேர் பலி

Published On 2020-10-18 01:35 GMT   |   Update On 2020-10-18 01:35 GMT
கோவையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது. நேற்று ஒரே நாளில் 6 பேர் தொற்றுக்கு பலியானார்கள்.
கோவை:

கோவையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 428 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்தனர். இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 35 ஆயிரத்து 116 பேர் குணமடைந்து உள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 389 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதி க்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 39,495 ஆக உயர்ந்து உள்ளது.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது மற்றும் 78 வயது முதியவர்கள், 47 வயது ஆண், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 63 வயது, 65 வயது பெண்கள், 54 வயது ஆண் ஆகிய 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் கோவையில் கொரோனாவுக்கு இதுவரை 518 பேர் பலியாகி உள்ளனர்.
Tags:    

Similar News