செய்திகள்
மரணம்

நாமக்கல்லில் கட்டிட மேஸ்திரி விபத்தில் பலி

Published On 2020-11-27 04:22 GMT   |   Update On 2020-11-27 04:22 GMT
நாமக்கல்லில் கட்டிட மேஸ்திரி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள என்.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராசு (வயது 32). கட்டிட மேஸ்திரி. நேற்று முன்தினம் நாமக்கல்லுக்கு வேலைக்கு வந்த சின்னராசு, இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நாமக்கல் - சேலம் ரோடு சாமி நகர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த சின்னராசுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னராசு பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அவரது தாயார் மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News