செய்திகள்
மரணம்

சித்தோட்டில் மின்சாரம் தாக்கி சென்ட்ரிங் தொழிலாளி பலி

Published On 2019-10-22 10:28 GMT   |   Update On 2019-10-22 10:28 GMT
சித்தோட்டில் மின்சாரம் தாக்கி சென்டரிங் தொழிலாளி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:

அரியலூர் மாவட்டம், குலமங்கலம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் அம்பிகேஸ்வரன் (வயது 34). இவர் நசியனூரில் உள்ள ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி கட்டுமான பணியில் சென்ட்ரிங் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அம்பிகேஸ்வரனை உடன் பணி செய்பவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து மனைவி திலகவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News