செய்திகள்
கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- மருத்துவக்குழு அறிவுறுத்தல்

Published On 2020-10-30 06:00 GMT   |   Update On 2020-10-30 06:00 GMT
புதுவையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவக்குழு அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக நாள்தோறும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறார். அதன்படி நேற்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் டாக்டர் பிரதீப் கவுர், கணேஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மருத்துவ குழுவினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில கூடுதல் தரமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தற்போதைய நிலையிலிருந்து வழுக்கும் ஆபத்து இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

இதைத்தவிர்க்க சோதனைகளை அதிகரிக்கவேண்டும். அதேபோல் கண்காணிப்பினையும் மேம்படுத்தவேண்டும். நோய்த்தொற்றினை குறைக்க தொடர்புகளை கண்டறியவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஒவ்வொரு பகுதியிலும் சர்வே நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
Tags:    

Similar News