ஆன்மிகம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ திருவிழா தொடங்கியது
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பெரியாழ்வாருக்கு கொடிமரத்துடன் கூடிய தனி சன்னதி உள்ளது. பெரியாழ்வாருக்கு ஆண்டுதோறும் அவருடைய அவதார திருநாளில் ஆனி சுவாதி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
இதையொட்டி பெரியாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பெரியாழ்வார் செப்புத் தேரோட்டம் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. கொடியேற்ற விழாவில், கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி பெரியாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பெரியாழ்வார் செப்புத் தேரோட்டம் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. கொடியேற்ற விழாவில், கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.