செய்திகள்
ஆதிநாராயணா ரெட்டி

ஆந்திரா மாநில முன்னாள் மந்திரி பாஜகவில் இணைந்தார்

Published On 2019-10-21 09:40 GMT   |   Update On 2019-10-21 09:40 GMT
தெலுங்கு தேசம் ஆட்சிக் காலத்தில் ஆந்திரா மாநிலத்தின் மந்திரியாக பதவி வகித்த ஆதிநாராயணா ரெட்டி இன்று பாஜகவில் இணைந்தார்.
புதுடெல்லி:

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக் காலத்தில் ஆந்திரா மாநிலத்தின் மந்திரியாக பதவி வகித்த ஆதிநாராயணா ரெட்டி இன்று பாஜகவில் இணைந்தார்.

ஆந்திரா மாநிலத்தின் கடப்பா மாவட்டத்துக்குட்பட்ட ஜம்மலமுடுகு சட்டமன்ற தொகுதியில்  2004-2019 ஆண்டுகளுக்கு இடையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மூன்றுமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ஆதிநாராயணா ரெட்டி.



அம்மாநிலத்தின் மந்திரியாகவும் முன்னர் பதவி வகித்த இவர் சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று முன்னாள் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா முன்னிலையில் ஆதி நாராயணா ரெட்டி பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.
Tags:    

Similar News