செய்திகள்
பர்கூர் அருகே ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
பர்கூர் அருகே ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47). ஜவுளி வியாபாரி. அச்சமங்கலம் கூட்டு ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி வந்தார். மேலும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் மனமுடைந்து ஓட்டலிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.