செய்திகள்
முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி அனைத்து அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி அனைத்து அமைப்பினர் முற்றுகை-பேரணி

Published On 2019-09-18 15:01 GMT   |   Update On 2019-09-18 15:01 GMT
முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி அனைத்து அமைப்பினர் கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம் ஆகியவை நடத்தினர்.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அனைத்து அமைப்புகள் சார்பில் நேற்று முத்துப்பேட்டை ரெயில் நிலையம் தகுதி உயர்த்த வேண்டும், திருவாரூர் -காரைக்குடி ரெயில் சேவை சென்னை காரைக்குடி ரெயில் சேவை 2006-ம் ஆண்டுக்கு முன் இருந்தது போன்று மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று ரெயில் நிலையம் முற்றுகை, கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம் ஆகியவை நடைபெற்றது. 

போராட்டத்திற்கு தமிழ் இலக்கிய மன்ற தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத்தலைவர் ராஜாராமன் முன்னிலை வகித்தார். முன்னதாக அனைத்து அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு கோரிக்கை குறித்து கோசங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் அங்கிருந்து கண்டன கோஷங்கள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக புறப்பட்டனர். அதன் பின்பு பேரூராட்சியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கார்த்திக், வர்த்தகக் கழக தலைவர் மெட்ரோ மாலிக், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன், மாவட்ட துணைச் செயலாளர் சந்திரசேகர ஆசாத், மார்க்சிஸ்ட் நகர செயலாளர் செல்லத்துரை, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் கோவி.ரெங்கசாமி, த.மு.மு.க. செயலாளர் சம்சுதீன், ம.தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் வெற்றி, உள்பட பலவேறு அரசியல் கட்சியினர் பல்வேறு பொது அமைப்பினர் கலந்துக் கொண்டனர்.
Tags:    

Similar News