செய்திகள்
கோப்பு படம்.

பிரம்மபுரம், கோரந்தாங்கல் அம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருட்டு

Published On 2020-11-16 12:41 GMT   |   Update On 2020-11-16 12:41 GMT
காட்பாடி அருகே இரு அம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காட்பாடி:

காட்பாடி அருகே இரு அம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் உண்டியலை 13-ந்தேதி இரவு மர்மநபர்கள் கடப்பாரையால் உடைத்து, காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர். உண்டியல் இருந்த சுவடே தெரியாமல் சுக்குநூறாக உடைத்துள்ளனர்.

அதேபோல் பிரம்மபுரம் ஊராட்சி கோரந்தாங்கல் பஸ் நிலையத்தில் துலுக்கானத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் உண்டியலை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு உடைத்துள்ளனர். உண்டியலின் கீழ் பாகத்தில் கடப்பாரையால் உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணம், சில்லரை நாணயங்களை திருடிச் சென்றனர். ஒரே இரவில் இரு அம்மன் கோவில்களின் உண்டியலை உடைத்து, காணிக்கை பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர். மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியவர்கள் பழைய குற்றவாளிகளா அல்லது புதிய நபர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News