செய்திகள்
நல்ல தண்ணீர் குளம்

கொளத்தூர் நல்ல தண்ணீர் குளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது

Published On 2020-12-02 10:03 GMT   |   Update On 2020-12-02 10:03 GMT
கொளத்தூரில் இருந்து படவேடு செல்லும் சாலையில் உள்ள நல்ல தண்ணீர் குளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு முழுவதும் நிரம்பி உள்ளது.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏரி நிரம்பி உபரி நீர் வழிந்தோடுகிறது. உபரி நீர் வழிந்தோடுவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தும், குளித்தும், மீன் பிடித்தும் மகிழ்கின்றனர். எனவே ஊராட்சி சார்பில் ஏரி பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் ஏரியில் குளிக்கக்கூடாது என்றும், மீறி குளித்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பொதுமக்கள் ஏரி கோடிபோகும் பகுதியில் குளித்தும், மீன்பிடித்தும் வருகின்றனர். மேலும் கொளத்தூரில் இருந்து படவேடு செல்லும் சாலையில் நல்ல தண்ணீர் குளம் உள்ளது. இந்த குளம் சமீபத்தில் குடிமராமத்து பணி மூலம் தூர்வாரப்பட்டது. ஏரியில் இருந்து வரும் தண்ணீர் மூலம் தற்போது நல்ல தண்ணீர் குளம் முழுவதும் நிரம்பி உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு குளம் நிரம்பியதால் இதனை காணவும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 20 அடிக்கு மேல் குளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளத்தில் குளிக்க அனுமதி இல்லை.
Tags:    

Similar News