செய்திகள்
விபத்து

ஸ்கூட்டர் மீது ஆம்புலன்ஸ் மோதல்: கல்லூரி மாணவிகள் 3 பேர் காயம்

Published On 2020-10-24 08:06 GMT   |   Update On 2020-10-24 08:06 GMT
தஞ்சை அருகே ஸ்கூட்டர் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவிகள் 3 பேர் காயம் அடைந்தனர்.
கள்ளப்பெரம்பூர்:

தஞ்சை அருகே உள்ள நடுக்காவேரியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய மகள்கள் கார்த்திகா(வயது18), திவ்யா(17). இவர்களின் தோழி செந்தமிழ்செல்வி(20). கல்லூரி மாணவிகளான இவர்கள் 3 பேரும் ஒரு ஸ்கூட்டரில் நேற்று காலை திருவையாறு -தஞ்சை புறவழிச்சாலையில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். 

சக்கரசாமந்தம் புறவழிச்சாலை அருகே இவர்கள் சென்ற போது மாணவிகள் சென்ற ஸ்கூட்டரும் அந்த வழியாக வந்த ஆம்புலன்சும் மோதிக்கொண்டன. இதில் மாணவிகள் கார்த்திகா, திவ்யா, செந்தமிழ்செல்வி ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News