ஆன்மிகம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

Published On 2021-02-25 05:17 GMT   |   Update On 2021-02-25 05:17 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த மாதமும் கிரிவலத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை :

கொரோனா காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து பவுர்ணமி கிரிவலத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 3.50 மணியளவில் தொடங்கி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 2.45 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த மாதமும் கிரிவலத்துக்கு தடை விதித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags:    

Similar News