செய்திகள்
கோப்புப்படம்

சிவகாசி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2021-01-13 02:31 GMT   |   Update On 2021-01-13 02:31 GMT
சிவகாசி அருகே வாலிபர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி:

சிவகாசி ஓடை தெருவை சேர்ந்தவர் காளியப்பன் மகன் பாண்டியராஜன் (வயது 33). திருமணம் செய்து கொள்ளாத இவர் வேலைக்கு செல்லாமல் கிடைக்கும் பணத்தை கொண்டு மது அருந்தி வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் வேலைக்கு செல்ல வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாண்டியராஜன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பாண்டியராஜன் அண்ணன் காளிராஜன் சிவகாசி டவுன் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News