செய்திகள்
ஆலங்குடி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
ஆலங்குடி அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் தலைமையிலான போலீசார் ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, கல்லாலங்குடி திருப்பதி நகரை சேர்ந்த யோகேஷ்வரன் (வயது 24) என்பவர் பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்து இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.