செய்திகள்
குமாரசாமி டி.கே.சிவக்குமார்

நான் நள்ளிரவில் எடியூரப்பாவை சந்திக்கிறேனா?: குமாரசாமிக்கு, டி.கே.சிவக்குமார் பதில்

Published On 2020-12-10 04:08 GMT   |   Update On 2020-12-10 04:08 GMT
எடியூரப்பாவையோ அல்லது மந்திரிகளையோ நள்ளிரவில் சந்தித்து எனது சொந்த வேலைகளை முடித்து கொண்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் நள்ளிரவில் சென்று முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து சொந்த வேலைகளை முடித்துக் கொள்வதாக குமாரசாமி கூறியுள்ளார். முதல்-மந்திரி எடியூரப்பாவையோ அல்லது மந்திரிகளையோ நள்ளிரவில் சந்தித்து எனது சொந்த வேலைகளை முடித்து கொண்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். 

குமாரசாமி என்னை 30 ஆண்டுகளாக பார்த்து வருகிறார். எனது போராட்டம் எத்தகையது என்பது அவருக்கு தெரியும். அவருக்கு கீழ் நான் பணியாற்றி இருக்கிறேன். அவரை மதிக்கிறேன். அவருக்கு அரசியல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் எனக்கு அத்தகைய எந்த பிரச்சினையும் இல்லை. நான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News