ஆன்மிகம்
பரிமள ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்
மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் நடந்த தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை திருவிழந்தூரில் பழமை வாய்ந்த பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. ஸ்ரீரெங்கப்பட்டினம், ஸ்ரீரெங்கம், சாரங்கம், கோவிலடி, பரிமளரெங்கம் என்று பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அருள்பாலிக்கும் பஞ்ச அரங்க கோவில்களில் 5-வது அரங்கமாக இந்த கோவில் விளங்குகிறது.
மேலும் இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமாகும். இந்திரன், சந்திரன், வேதங்கள் வழிபட்டதாக கூறப்படும் இந்த கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உற்சவம் கடந்த மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தேர் திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடந்தன. கோவிலின் முக்கிய திருவிழாவான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
கோவில் சந்திரபுஷ்கரணி தீர்த்தம் எனப்படும் தெப்பக்குளத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், பெருமாள், தாயாருடன் எழுந்தருளினார். 3 சுற்றுக்கள் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமாகும். இந்திரன், சந்திரன், வேதங்கள் வழிபட்டதாக கூறப்படும் இந்த கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உற்சவம் கடந்த மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தேர் திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடந்தன. கோவிலின் முக்கிய திருவிழாவான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
கோவில் சந்திரபுஷ்கரணி தீர்த்தம் எனப்படும் தெப்பக்குளத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், பெருமாள், தாயாருடன் எழுந்தருளினார். 3 சுற்றுக்கள் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.