செய்திகள்
கைது

கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறித்தவர் கைது

Published On 2020-11-15 09:53 GMT   |   Update On 2020-11-15 09:53 GMT
தஞ்சையில் கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் ரூ. 200-யை பறித்து சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்:

தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 38). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கரந்தை கடைத்தெருவில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், மகேந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200-யை பறித்து சென்று விட்டார். 

இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் குளத்து மேட்டுத்தெருவை சேர்ந்த விஜயரெங்கநாதன்(40) என்பவர் மகேந்திரனை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News