ஆன்மிகம்
பிரசன்ன வெங்கடாஜலபதி

புரட்டாசி சனிக்கிழமைகளில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு பக்தர்கள் வருகைக்கு தடை

Published On 2021-09-17 07:48 GMT   |   Update On 2021-09-17 07:48 GMT
கொரோனா தொற்று காரணமாக புரட்டாசி சனிக்கிழமை நாட்களான வருகிற 18, 25 ஆகிய தேதிகளிலும் மற்றும் அக்டோபர் மாதத்தில் 2, 9, 16 ஆகிய தேதிகளிலும் என 5 நாட்களில் பக்தர்கள் வருகைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
துறையூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம், தாசில்தார் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், துறையூரை அடுத்த பெருமாள் மலை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக புரட்டாசி சனிக்கிழமை நாட்களான வருகிற 18, 25 ஆகிய தேதிகளிலும் மற்றும் அக்டோபர் மாதத்தில் 2, 9, 16 ஆகிய தேதிகளிலும் என 5 நாட்களில் பக்தர்கள் வருகைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும். கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் திறக்க அனுமதி இல்லை.
Tags:    

Similar News