உள்ளூர் செய்திகள்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் பஞ்சப்பிரகார விழாவையொட்டி சுவாமி, அம்பாள் உருமாறி பக்தர

திருவானைக்காவல் கோவிலில் பஞ்சப்பிரகார விழா

Published On 2022-04-17 09:19 GMT   |   Update On 2022-04-17 09:19 GMT
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற பஞ்சப்பிரகார விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருச்சி:


திருச்சி திருவானைக்-காவல் ஜம்பு-கேஸ்வரர், அகிலாண்-டேஸ்வரி கோவில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் மாதம் 11-&ந்தேதி கொடி-யேற்றத்துடன் தொடங்கி வரும் 18-&ந்தேதி வரை நடை-பெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் கடந்த 2-&ந்தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4&ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சிய-ளித்தனர்.

விழாவின் 39&ம் நாளான நேற்று மாலை பஞ்சப்பிரகார வைபவ காட்சி நடைபெற்றது. பிரம்மன் தான் படைத்த பெண்ணின் அழகில் மயங்கி படைக்கும் தொழிலை மறந்து இருந்தார். அவருக்கு புத்தி-புகட்டும் வகையில் சுவாமி அம்பாள் வேடத்-திலும், அம்பாள் சுவாமி வேடத்-திலும் சென்று பிரம்-மனுக்கு நல்புத்தி வழங்கியதே இந்த வைபவமாகும்.

இந்த வைபத்தையொட்டி சிவபெருமான் அம்பாள் வடிவத்திலும், அம்பாள் சிவபெருமாள் வடிவத்திலும் உருமாறி வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி இரவு 7 மணிக்கு புறப்பட்டு கோவிலின் 5 பிரகாரங்-களிலும் விடிய, விடிய உலா வந்து பக்தர்களுக்கு காட்சிய-ளித்தனர்.

விழாவின் 40&ம் நாளான இன்று (17&-ந்தேதி) விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (18&ந்தேதி) மாலை 7 மணி-யளவில் மண்டலா-பிஷேகத்துடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Tags:    

Similar News