செய்திகள்
தற்கொலை முயற்சி

ஆரணி டி.எஸ்.பி. அலுவலகத்தில் காதல் கணவருடன் செல்வதாக மகள் கூறியதால் தாய் தற்கொலை முயற்சி

Published On 2021-10-16 11:01 GMT   |   Update On 2021-10-16 11:01 GMT
ஆரணி டி.எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடிக்கு துணையாக 30-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆரணி:

ஆரணி அருகே உள்ள சின்ன அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை உஷா தம்பதியினரின் மகள் சுவேதா. இவர் ஆரணி அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். பயிற்சிக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது ஆரணி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் இரும்பேடு கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருடன் காதல் ஏற்பட்டது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற சுவேதா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சுவேதா, மாதவன் இருவரும் வீட்டை விட்டு வெளியே திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து நேற்று காலையில் ஆரணி.டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். டி.எஸ்.பி அலுவலகத்தில் காதல் ஜோடி வருகை புரிந்தனர்.

மேலும் இந்த காதல் ஜோடிக்கு துணையாக 30-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் இந்த இடத்தில் குவிக்கபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது சுவேதா தன்னுடைய கணவருடன் செல்வதாக கூறினார்.

இதனால் அவரது தாயார் உஷா டி.எஸ்.பி. அலுவலக மேஜையில் வைக்கப்பட்டிருந்த சானிடைசரை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உஷாவை மீட்டு உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

Similar News