செய்திகள்
தனியார் ஆஸ்பத்திரி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
அரசு நிர்ணயித்த கொரோனா கிசிச்சை கட்டணத்தை விட அதிகமாக சில தனியார் மருத்துவமனைகள் வசூலித்து வருவதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கட்டணத்தை நிர்ணயித்த அரசு அதனை முறையாக செயல்படுத்த வேண்டும்.
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.