செய்திகள்
புதுக்கோட்டையில் எஸ்.ஐ. வெட்டி படுகொலை
புதுக்கோட்டையில் ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற சம்பவத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடும் திருடும் கும்பல் ஒன்றினை விரட்டிச் சென்ற போது அக்கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன் டிஐஜி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் இந்த படுகொலை தொடர்பாக, 2 டிஎஸ்பிக்கல் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.