ஆன்மிகம்
காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய தேர்பவனி
காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழாவை முன்னிட்டு வண்ண பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசா தேர்பவனி ஆலய வளாகத்தில் நடந்தது.
காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழா நாட்களில் தினமும் மாலை திருப்பலி மட்டும் நடத்தப்பட்டது.
விழாவின் இறுதி நாளான நேற்று காலை 7 மணிக்கு ஆலய பங்குதந்தை பெஞ்சமின் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு பங்குதந்தை ஜெயப்பிரகாஷ் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. தொடர்ந்து வண்ண பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசா தேர்பவனி ஆலய வளாகத்தில் நடந்தது.
இதில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து திருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு பேரவை மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
விழாவின் இறுதி நாளான நேற்று காலை 7 மணிக்கு ஆலய பங்குதந்தை பெஞ்சமின் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு பங்குதந்தை ஜெயப்பிரகாஷ் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. தொடர்ந்து வண்ண பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசா தேர்பவனி ஆலய வளாகத்தில் நடந்தது.
இதில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து திருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு பேரவை மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.