உலகம்
மாடர்னா தடுப்பூசி

2-வது டோஸ் செலுத்தி 5 மாதங்களுக்கு பின்னர் மாடர்னா தடுப்பூசிக்கு அதிக செயல்திறன்

Published On 2021-12-03 03:17 GMT   |   Update On 2021-12-03 03:17 GMT
மாடர்னா தடுப்பூசியை செலுத்திய 3 லட்சத்து 52 ஆயிரத்து 878 பேருடன், தடுப்பூசி போடாத அதே எண்ணிக்கையிலான நபர்களை ஒப்பிட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான மாடர்னா தடுப்பூசியின் 2-வது டோசை செலுத்தி 5 மாதங்கள் ஆன நிலையில் அது தொற்று பாதிப்பை தடுப்பதில் 87 சதவீத செயல்திறனை கொண்டுள்ளது.

நோயின் தீவிரத்துக்கு எதிராக 95 சதவீத பாதுகாப்பை கொண்டுள்ளது.

மரணத்துக்கு எதிராக 98 சதவீத செயல்திறனை பெற்றிருக்கிறது.



மாடர்னா நிறுவனத்தின் நிதியளிப்பில், இந்த தடுப்பூசியை செலுத்திய 3 லட்சத்து 52 ஆயிரத்து 878 பேருடன், தடுப்பூசி போடாத அதே எண்ணிக்கையிலான நபர்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதன் முடிவுகள் ‘லேன்செட்’ மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.


Tags:    

Similar News